மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக விசேட வேலைத்திட்டம் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதி!
Sunday, December 4th, 2022
மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக விசேட வேலைத்திட்டமொன்றை வகுக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, ‘உள்ளடக்கிய அபிவிருத்திக்கான உருமாற்ற தீர்வுகள்: அணுகக்கூடிய மற்றும் சமத்துவமான உலகத்தை மாற்றுவதில் புதுமையின் பங்கு’ என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இந்த உறுதிமொழியை வழங்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ‘
சுகாதாரம், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சுக்களின் ஆதரவுடன் விசேட வேலைத்திட்டம் வகுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பிராந்திய கிளைகள் ஊடாக மேலும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் - கொழும்பு...
இது அரசியல் செய்யும் நேரம் அல்ல - அரசாங்கம் என்ற வகையில், உங்களின் சிரமங்களை போக்கவும், அன்றாட வாழ்க...
டிசம்பர் 9 இல் இரண்டு வரி சட்டமூலங்கள் மீதான விவாதம்!
|
|
|


