தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாட்டினாலேயே தேர்தல் பிற்போடப்படுகின்றது – சுயாதீனநாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவிப்பு!
Thursday, November 17th, 2022
தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாட்டினாலேயே உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாமல் உள்ளதாக சுயாதீனநாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், தேர்தல் ஆணைக்குழு இல்லாவிட்டால், தேர்தல் திணைக்களம் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை இலகுவாக நடத்தியிருக்கும் எனவும் டிலான் பெரேரா தெரிவித்தார்.
சமன் ரத்னாநயக்க உள்ளிட்ட தேர்தல் திணைக்கள் அதிகாரிகளுக்கு, உள்ளுராட்சி தேர்தலை நடத்தும் அந்த அதிகாரத்தை எவரும் இல்லாது செய்யக்கூடாது என் கூறினார்.
மீறி, அவ்வாறு எவரேனும் செயற்படுவார்களாயின் நாம் நீதிமன்றின் ஊடாக உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என குறிப்பிட்டார்.
Related posts:
பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிமன்றால் தள்ளுபடி!
அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு தெரியப்படுத்துங்கள்: மக்களுக்காக அரசாங்கத்தின் விசேட வேலைத்திட்டம...
பசுமை விவசாயம் என்பது அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட சிறந்த முடிவு - அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெர...
|
|
|


