சமூகத்தில் 4,000 தொழுநோயாளிகள் இருப்பதாக சுகாதார அமைச்சு அதிர்ச்சி தகவல்!
Thursday, November 17th, 2022
சமூகத்தில் சுமார் 4,000 தொழுநோயாளிகள் இருப்பதாகவும், அவர்கள் சுகாதார அதிகாரிகளிடம் பதிவாகவில்லை எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தொழுநோய் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, 2022 ஆம் ஆண்டின் முதல் 7 மாதங்களில், 450 க்கும் மேற்பட்ட தொழுநோயாளிகள் இந்நாட்டில் சிகிச்சை பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கையின் சனத்தொகையில் 20 வீதமானவர்கள் 08 வருடங்களுக்குள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
நீரிழிவு நோயை முறையாகக் கட்டுப்படுத்தாவிட்டால் அது நேரடியாக கண்களையே பாதிக்கும் என தேசிய கண் வைத்தியசாலையின் நிபுணர்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது
000
Related posts:
இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!
பருத்தித்துறை சாலையின் பேருந்து சேவை கட்டைக்காட்டுடன் நிறுத்தப்படுவது ஏன்? - ஈ.பி.டி.பியின் பருத்தித...
படையினரின் சேவைகளை இன்று சிலர் புறக்கணித்து செயற்படுகின்றனர் - இராணுவத் தளபதி குற்றச்சாட்டு!
|
|
|
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ரவுடிக் கும்பல் அட்டகாசம் : ஒருவர் ஆபத்தான நிலையில் - பாதுகாப்பு ...
குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்காக உதவி திட்டம் - மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ...
உரிய நேரத்தில் பணம் கிடைக்காவிட்டால் வாக்குச் சீட்டுகள் அச்சிடுவதில் தாமதம் ஏற்படும் - அரசாங்க அச்சக...


