உரிய நேரத்தில் பணம் கிடைக்காவிட்டால் வாக்குச் சீட்டுகள் அச்சிடுவதில் தாமதம் ஏற்படும் – அரசாங்க அச்சகத் திணைக்களம் தெரிவிப்பு!
Tuesday, January 24th, 2023
வாக்குச் சீட்டுகள் மற்றும் இதர தேர்தல் பத்திரங்கள் அச்சிடுவதற்கு பணம் கிடைக்காவிட்டால், கூடுதல் கொடுப்பனவுகளை செலுத்த முடியாமல் அச்சிடுவதில் தாமதம் ஏற்படும் என அரசாங்க அச்சகம் தெரிவித்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அடிப்படை பத்திரங்களை அச்சிடும் பணியை அரசு அச்சகத் துறை ஏற்கெனவே தொடங்கியுள்ளது.
எவ்வாறாயினும் எதிர்வரும் தேர்தலின் அச்சடிப்பு நடவடிக்கைகளில் ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவுகளுக்கு பணம் கிடைக்காத பட்சத்தில் சாதாரண கடமை நேரத்தில் மாத்திரம் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் காலதாமதம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் தேர்தல் வாக்குச் சீட்டுகள் அச்சிடுவதற்கு போதுமான தாள்கள் இருப்பதாகவும் அரசாங்க அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் விடுமுறைகள் அனைத்தும் இரத்து - சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக் அறி...
யாழ்.பல்கலைக் கழகத்தின் நுண்கலை பீடத்திற்கு விண்ணப்பிப்பதற்கான முடிவுத் திகதி நீடிப்பு!
சிறுகச் சிறுக சேகரித்த மக்கள் நிதியை சபை ஆரோக்கியமாக பயன்படுத்துவது அவசியம் - பாதீட்டு உரையில் உறுப்...
|
|
|


