பாடசாலை மாணவர்களுக்கான தேசியரீதியான வழிகாட்டல் மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வுசார் செயற்றிட்டம் யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களால் முன்னெடுப்பு!
Friday, October 28th, 2022
யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான தேசியரீதியான வழிகாட்டல் மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வுசார் செயற்றிட்டம் இன்றையதினம் யாழ்ப்பாணம் அராலி சரஸ்வதி மகாவித்தியாலயத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை மற்றும் அதிகரித்து வரும் பாடசாலை மாணவர்களின் இடைவிலகலை தவிர்ப்பதற்கும் மாணவர்களிடையே விழிப்புணர்வூட்டுமுகமாக குறித்த செயற்றிட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த செயற்றிட்டமானது வடக்கு கிழக்கு மலையகம் தழுவிய பாடசாலைகளை அடிப்படையாக கொண்டு எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.
யாழ் பல்கலைக்கழக கலைப்பீடத்தைச் சேர்ந்த பயிற்சி பெற்ற மாணவ ஆளணியினரால் இச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மாலபே கல்லூரி பிரதம நிறைவேற்று அதிகாரி ரஷ்யா பயணம்!
இன்றும் 13 பேக்கு கொரோனா தொற்று உறுதி: இலங்கையின் எண்ணிக்கை 433 ஆக உயர்வு!
தீ காயங்களுடன் சிகிச்சை பெற்றுவந்த இளம் குடும்ப பெண் பலி - ஆறுகால்மடம் பகுதியில் சோகம்!
|
|
|


