விருப்பினார் டக்ளஸ் – நிறைவேற்றினார் ஜனாதிபதி – தலைநகரில் பறக்கிறது தமிழர் கொடி!
Monday, October 24th, 2022
இந்துக்களின் புனித நிகழ்வுகளில் ஒன்றான தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையிலான அனைத்து ஏற்பாடுகளும் ஜனாதிபதி செயலகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் ஜனாதிபதி செயலக வளாகத்தில் நந்திக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதுடன், மின் விளக்குகளினாலும் ஜனாதிபதி மாளிகை அலங்கரிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற இந்துக்களின் பூஜை வழிபாடுகளில் ஒன்றான நவராத்திரி விழா, ஜனாதிபதி மாளிகையில் ஏற்பாடு செய்யப்படாமை தொடர்பாக இந்து மதம் சார்ந்தவர்களினால், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
அதுதொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எடுத்துச் சென்றிருந்ததுடன், தீபாவளிப் பண்டிகையை ஜனாதிபதி மாளிகையில் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. – 24.10.202
Related posts:
அர்ப்பணிப்போடும் உழைக்கும் அரசியல் தலைமைகளை தெரிவுசெய்யவதனூடாகவே மக்கள் மேம்பாட்டை காணமுடியும் - ட...
மக்களின் உணர்வுகளுக்கு ஏற்ப வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா!
தரகு அரசியலுக்கு மொழியுரிமை பிரச்சினை அல்ல – டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் தெரிவிப்பு!
|
|
|


