தரகு அரசியலுக்கு மொழியுரிமை பிரச்சினை அல்ல – டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் தெரிவிப்பு!

Friday, July 26th, 2019

மொழி உரிமை பற்றி வாயளவில் பேசிக் கொண்டே ‘கம்பெரலிய”வில் புரண்டு கொண்டிருக்கிறார்கள். பணம் பெட்டி கிடைக்கும் என்றால் அவர்களுக்கு மொழியுரிமை ஒரு பொருட்டல்ல என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அரசியல் அமைப்புச் சட்டத்தின் மறுசீரமைப்பு தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

கடந்த ஆட்சிக் காலங்களில் நெல்சிப் என்கின்ற திட்டம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்@ராட்சி மன்றங்களை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த நெல்சிப் திட்டத்தில் கூட இதே தமிழ்த் தரப்பினர் அவர்களது நிர்வாகத்தின் கீழிருந்த உள்@ராட்சி சபைகளிலே ஊழல், மோசடிகளில் ஈடுபட்டிருந்த வரலாறும் உண்டு என்பதையும் இங்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்

‘திவிநெகும’ – வாழ்வின் எழுச்சித் திட்டமானது ஒரு சட்ட ஏற்பாடாக வர இருந்தபோது, அதன் ஊடாக மாகாண சபைகளின், உள்@ராட்சி சபைகளின் மூலமான சில அபிவிருத்தித் திட்டங்கள் பறிபோய்விடும் என அதனை நிராகரித்தோர், இன்று மத்திய அரசின் வேலைத் திட்டத்தை ‘கம்பெரலிய’ என தங்களது நிறைவேற்றுச் செயற்பாடாக பிரதேச செயலகங்கள் ஊடாக முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில்தான் அதிகாரப் பகிர்வு பற்றியும் கதைக்கின்றனர்.

மாகாண சபைகளுக்கான தேர்தல் திருத்தச் சட்டமூலமொன்று கொண்டுவரப்பட்டு, நாடாளுமன்றத்தில் அதற்கான அங்கீகாரம் கிடைக்காத நிலையில், அது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கென ஒரு குழு நாடாளுமன்றத்தில் நியமனம் பெற்றது. அந்தக் குழுவின் அறிக்கையானது ஒரு வருடம் ஆகின்ற நிலையிலும் இதுவரையில் இல்லாத காரணத்தால், மாகாண சபைகளுக்கான தேர்தலில் இழுபறி நிலைமைகள் ஏற்பட்டுள்ளன. அதிகாரப் பகிர்வு தொடர்பில் கதைக்கின்ற இந்தத் தமிழ்த் தரப்பினர், அரசுக்கு முண்டு கொடுத்துக் கொண்டு, வெறுமனே ஊடகங்களுக்காகக் கதைக்காமல், இந்த அறிக்கையை விரைவுபடுத்தி, தற்போது இருக்கின்ற அதிகாரப் பகிர்வு தொடர்பில் அக்கறை எடுத்திருக்கலாம். அதுவும் இல்லை.

Related posts:

முன்னாள் போராளிகளை நான் பாதுகாப்பேன் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள விசேட செய்தி!
ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதில் நாம் மேலும் முன்னோக்கிச் செல்ல வேண்டும்  - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம...
தெற்கு மக்களின் மனிதநேயம் தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப பெரிதும் உதவும் – டக்ளஸ் எம்.பி. நம்பிக்க...

அசௌகரியங்களை எதிர்கொ ள்ளும் மக்களுக்கு உடனடித் தீர்வுகளைப் பெற்றுத்தரவேண்டும் - ஆளுநரிடம் டக்ளஸ் தேவ...
பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடுப்பங்களின் மேம்பாட்டிற்கு விஷேட திட்டம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ...
வடக்கிற்கு மறுக்கப்பட்ட அதிகாரங்கள் கிடைத்துள்ளமை இணக்க அரசியலுக்கான இன்னுமொரு வெற்றி – அமைச்சர் ட...