அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – தீபாவளி தினத்தன்று மின் துண்டிக்கப்படாதென மின்சார சபை அறிவிப்பு!

Saturday, October 22nd, 2022


தீபாவளி தினத்தன்று நாடளாவிய ரீதியில் முழுமையான மின்சார விநியோகத்தினை வழங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிககை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் அமுலப்படுத்தப்பட்டு வருகின்ற  மின் வெட்டை எதிர்வரும் திங்கட் கிழமையான தீபாவளி பண்டிகையன்றும் வழமை போன்று  நடைமுறைப்படுத்துவதற்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக அவதானம் செலுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதமர் தினேஸ் குணவர்த்தன மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஆகியோருடன் நேற்று தொடர்பு கொண்டு, இந்துக்களினால் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதற்கான வரலாற்றுக் காரணத்தை தெளிவுபடுத்தியதுடன், அன்றைய நன்நாளில் நாட்டை சில மணி நேரங்கள்  இருளில் மூழ்கடிப்பது பொருத்தமற்ற செயற்பாடு என்பதையும் தெளிவுபடுத்தினார்.

இந்நிலையில், எதிர்வரும் 24 ஆம் திகதி மின்சார தடை அமுல்ப்படுத்தப்படாது என்பதை இன்று  இலங்கை மின்சார சபையினால் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. –

Related posts:

கிளிநொச்சி விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் வழங்கப்பட்ட இருசக்கர உழவு இயந்திரங்களை இலவசமாக வழங்க ஏற...
சட்டவிரோத கடற்றொழில் மற்றும் நன்னீர் வேளாண்மையை முழுமையாக தடுக்க வருகிறது ஒழுங்குவிதிகள் - அமைச்சர் ...
இந்நியாவில் தடுத்துவைக்கப்பட்டுள் வாழைச்சேனை மீனவர்கள் எதிர்வரும் 14 ஆம் திகதி விடுதலை - உறவினர்கள் ...

பனம் தொழிற்துறையை நம்பிவாழும் குடும்பங்களின் வாழ்வாதாரம் மேலும் பலப்படுத்தப்படும்  - டக்ளஸ் தேவானந்த...
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடன் திட்டங்களை கடனுக்கு வழங்கிக்கொண்டிருக்கின்றீர்கள் – நாடாளு...
அராலித்துறையில் இறால் வளர்ப்புக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதேசத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில...