மூத்த தோழர் பண்டாவின் புகழுடலுக்கு கட்சிக்கொடி போர்த்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!

Sunday, October 16th, 2022


வயது மூபின் காரணமாக மறைந்த ( சுப்பையா பசுபதி )/தோழர் பண்டா அவர்களது புகழுடலுக்கு கட்சிக்கொடி  போர்த்தி  தனது இறுதி அஞ்சலி மரியாதையை ஈழ மக்கள் ஜனனாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும்  அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா செலுத்தினார்.

நீண்டகாலமாக  வயது மூப்பின் காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தோழர்  பணடா வவுனியாவில்  நேற்றுமுந்தினம் காலமானார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த உறுப்பினரான சுப்பையா பசுபதி தோழர் பண்டா அவர்களின் இறுதி நிகழ்வு இன்றையதினம் (16) வவுனியாவில  நடைபெற்ற நிலையில்  வவுனியாவுக்கு விஜயம்.மேற்கொண்ட  அமைச்சர்  டக்ளஸ் தேவானந்த  கட்சிக்கொடி போத்தி தனது இறுதி  அஞ்சலி மரியாதையை செலுத்தியிருந்தார்.

அத்துடன் பணடா தோழரது  பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் கட்சியின் சார்பில் செயலாளர் நாயகம் ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டார்.

இதேவாளை தோழர் பண்டாவின் உகழுடலுக்கு கட்சியின்  தேசிய அமைப்பாளர்  பசுபதி இவரத்தினம், கட்சியின் வன்னி  மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன், கட்சியின்  முக்கியஸ்தர் தோழர் விந்தன், கட்சியிம்.ஊடகச் செயலாளர் தோழர் ஸ்டாலின்,  , வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் கந்தசாமி கமலேந்திரன் மற்றும் கட்சியின் தோழர் என பலர் கலந்துகொண்டு  தமது இறுதி அஞ்சலி மரியாதையை செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
……

Related posts:

அரசியல் கைதிகளின் பிரச்சினை உள்ளிட்ட அனைத்துவிதமான பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும் - ஊடக சந்திப...
பிரச்சினையை தீராப் பிரச்சினையாக்கவே போராட்டங்கள் நடத்தப்படுகின்றன - இதுவும் சுமந்திரனின் நடிப்பில் ...
பிரச்சினைகளுக்கு தீர்வைக்காண வன்முறையற்ற ஜனநாயக வழியில் மக்கள் அணிதிரண்டால் தீர்வினை பெற்றுத்தர எப்ப...

ஊர்காவற்றுறை மக்களது குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் நிரந்தர தீர்வு: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உடனடி...
தமிழ் மொழி பாடநூல்களில் காணப்படும் தவறுகளுக்கு இன்னும் தீர்வு வழங்கப்படாதிருக்கிறது - டக்ளஸ் எம்.பி....
திருவடிநிலை - காட்டுப்புலம் கொங்காதேவி கடற்றொழிலாளர்களின் இறங்குதுறை பிரச்சினை தொடர்பில் அமைச்சர் ட...