உடன் அமுலுக்கு வரும் வகையில் தின்பண்டங்களின் விலைகள் குறைக்கப்படும் -உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு!

Tuesday, September 20th, 2022

உடன் அமுலுக்கு வரும் வகையில் தின்பண்டங்களின் விலைகளை 10-13 வீதத்தால் குறைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தின்பண்ட உற்பத்தியாளர்கள் சங்கம் (LCMA) தெரிவித்துள்ளது.

அனைத்து தயாரிப்பு வகைகளிலும் தின்பண்டப் பொருட்களின் விலைகள் குறைவதை நுகர்வோர் காண்பார்கள் என சங்கத்தின் தலைவர் எஸ்.எம்.டி. சூரியகுமார தெரிவித்துள்ளார்.

இரண்டு முக்கிய மூலப்பொருட்களின் விலை குறைவடைந்துள்ளதால், சந்தையில் தின்பண்டங்களின் விலைகளை குறைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தின்பண்டங்களின் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் சீனி கிலோவுக்கு 40 ரூபாவினால் குறைந்துள்ளதுடன், தாவர எண்ணெய்யின் விலை கிலோவிற்கு சுமார் 250 ரூபாவினால் குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பொது மக்கள் அதிக விலைக்கு தின்பண்டங்களை கொள்வனவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts:

புத்தாண்டு காலத்தில் நியாயமான விலையில் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்யக்கூடிய சூழ்நிலை உருவாக...
கடவுச்சீட்டு வழங்குவதில் புதிய நடைமுறை - இன்றுமுதல் நாளொன்றுக்கு 3,500 கடவுச்சீட்டுகள் வழங்க குடிவர...
ஆளுநருக்கு அனுப்பிய கடிதத்தை மீளப்பெறுவதாக பதில் மாகாண சுகாதார பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவிப்பு!