அந்தோனிபுரம் கடற்றொழில் கிராமத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – மாதர் சங்கத்தினருக்கான கருவாடு பதனிடும் இயந்திரத்திரமும் வழங்கி வைப்பு!

Monday, September 19th, 2022

அந்தோனிபுரம் கடற்றொழில் கிராமத்திற்கு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த கிராமத்தை  சேர்ந்த மாதர் சங்கத்தினருக்கான கருவாடு பதனிடும் இயந்திரத்தினை வழங்கி வைத்ததுடன்,  கடற்றொழிலாளர்களின் எதிர்பார்ப்பு தொடர்பாகவும் கலந்துரையாடினார்.

குறிப்பாக கடலட்டை பண்ணைகளை அமைப்பதற்கு விண்ணப்பித்தவர்களுக்கு பண்ணைகள் வழங்குவதை விரைவுபடுத்துவது உட்பட பல்வேறு தொழில்சார் விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

மேலும், இலுப்பைக்கடவை கடற்றொழிலாளர் கிராமத்தில் கடற்றொழிலாளர் சங்கங்களுக்கு இடையில் காணப்படும் முரண்பாடுகளை கேட்டறிந்த அமைச்சர் டக்ளஸ் தேவானநதா, கலந்துரையாடல் மூலம் முரண்பாடுகளை  தீர்த்துக்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கியதுடன், கலந்துரையாடலுக்கான முன்னாய்த்தங்களையும் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

00

Related posts:

அமரர் ஶ்ரீஸ்கந்தராஜா (சிறி ஐயா) அவர்களின் புகழுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி...
நான் யார் என்பதை எனது மக்கள் நன்கு அறிவார்கள் - வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர் நியமனம் தொடர்பில் நடந...
'சுகந் இன்ரனாசினல்' நிறுவனத்தின் கடலட்டை பதனிடும் தொழிற்சாலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்து...

மலர்ந்தது தமிழரசு என்றவர்கள் எமது மக்களை கையேந்திகளாகவே வீதிகளில் நிறுத்தியுள்ளனர் - டக்ளஸ் எம்.பி ச...
பருத்தியடைப்பு காணி சுவீகரிப்பை தடுத்து நிறுத்திய டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு மக்கள் நன்றி தெரிவிப்...
ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் வன்னி மாவட்ட காரியாலய திறப்பு விழாவில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவா...