திருகோணமலையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை உருவாக்க LIOC க்கு அழைப்பு – மின் இணைப்பை இந்தியாவுடன் இணைக்க தீவிரமாக முயற்சித்து வருவதாகவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Monday, September 19th, 2022

இலங்கையின் இரண்டாவது எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை திருகோணமலையில் அமைக்க லங்கா ஐஓசி (LIOC ) நிறுவனத்திற்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

லங்கா ஐஓசியின் 20 வருட செயற்பாடுகளை முன்னிட்டு அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

லங்கா ஐஓசி மற்றும் அரசால் நடத்தப்படும் சிலோன் பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஜனவரி 2022 இல் திருகோணமலையிலுள்ள எண்ணெய் தொட்டிகளை கூட்டாக அபிவிருத்தி செய்வதற்கான கூட்டு முயற்சியில் ஈடுபட்டன.

அடுத்த 50 ஆண்டுகளுக்கு இலங்கை அரசாங்கத்துடன் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், அங்குள்ள 99 தாங்கிகளில் 61 தாங்கிகளை இரு தரப்பினரும் கூட்டாக புதுப்பிக்கும் அதே வேளையில் 24 தாங்கிகளை பெற்றோலிய கூட்டுத்தாபனமும், 14 தாங்கிகளை LIOC யினாலும் அபிவிருத்தி செய்யப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையில், இலங்கை தனது மின் இணைப்பை இந்தியாவுடன் இணைக்க தீவிரமாக முயற்சித்து வருவதாக அமைச்சர் விஜேசேகர மேலும் தெரிவித்தார்.

“ஜனாதிபதியின் தொலைநோக்குப் பார்வை மற்றும் ஆலோசனையுடன், இந்தியாவை இலங்கைக் கட்டத்துடன் இணைக்கும் கட்டத்தை இணைப்புக்கான சாத்தியத்தை ஆராய்வோம் என்று நாங்கள் நம்புகிறோம்” என அவர் குறிப்பிட்டார்.

இலங்கையானது பல புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விருப்பங்களை கொண்டு வருவதாகவும், எனவே இரு நாடுகளுக்கும் இடையிலான கட்ட இணைப்பு பரஸ்பர நன்மை பயக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

எமது மண்ணின் தொன்மைக் குடிகள் தாம் என்பதில் தமிழ் மக்கள் உறுதியுடன் உள்ளார்கள் - ஈ.பி.டி.பியின் சர்வ...
பிபிசி தமிழோசையின் சிற்றலை ஒலிபரப்புச் சேவை நவீன தொழில்நுட்பத்துடன் சமூக ஊடகங்களுக்கு மாற்றம்.
பாடசாலை, முன்பள்ளிகளில் அஸ்பெஸ்டோஸ் கூரைகளுக்கு பதிலாக மாற்று ஏற்பாடு - சுற்றாடல் அமைச்சரின் யோசனைக்...