ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு மூட்டை யூரியா உரம் இலவசம் – விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர உறுதியளிப்பு!
Sunday, September 18th, 2022நாட்டில் உள்ள ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு மூட்டை யூரியா உரம் இலவசமாக வழங்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் அறுவடை காலத்தில் விவசாயத்திற்கு தேவையான யூரியா உரமானது ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு மூட்டை (50 கிலோ) இலவசமாக வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
அகுனுகொலபொலஸவில் நேற்று சனிக்கிழமை (17) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு பேசும்போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த திட்டத்திற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
இரண்டரை ஏக்கருக்கும் குறைவான விவசாய நிலங்களைக் கொண்ட விவசாயிகளுக்கு உரம் ஒரு மூட்டை வழங்கப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தவணை பரீட்சை: பாடசாலையில் நடந்தேறிய நெகிழ்ச்சியான சம்பவம்!
யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கொரோனா தொற்றின் அபாயம் இன்னமும் நீங்கவில்லை – மக்கள் எச்ச...
நீர்ப்பாசனத் திணைக்கள கொடுப்பனவு முறை அரச நிதி ஒழுங்கிற்கு ஏற்றதாக இல்லை - அரசாங்கக் கணக்குகள் பற்ற...
|
|
|
கொரோனா அச்சுறுத்தல்: பேருந்துகளில் நடமாறும் விற்பனை நடவடிக்கைகளுக்குத் தடை - இலங்கை போக்குவரத்து சபை...
சீரற்ற காலநிலை - நாடு முழுவதும் 2 ஆயிரத்து 750 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 11 ஆயிரத்து 542 பேர் பா...
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் தலைமையில் கூட்டம் - ரயில்கள் மூலம் எரிபொருள் விநியோகத்தை விரிவுப...


