எக்ஸ்பிரஸ் கப்பல் விபத்து – நஸ்டஈட்டினைப் பெற்றுத் தருமாறு நீர்கொழும்பு களப்பு பிரதேச மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!

Tuesday, September 6th, 2022


…..
நீர்கொழும்பு களப்பு சார்ந்த பிரதேசத்தில் கடற்றொழில் ஈடுபடுகின்ற கடற்றொழிலாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, பேர்ள் எக்ஸ்பிரஸ் கப்பல் விபத்து காரணமாக மீன் பிடிப்பதற்கு தடைவிதிக்கப்பட்ட காலப் பகுதியில் ஏற்பட்ட பாதிப்பிற்கான நஸ்டஈட்டினைப் பெற்றுத் தருமாறு கோரிக்கை முன்வைத்தனர்.

குறித்த பிரதேசத்தினை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் பேர்ள் எக்ஸ்பிரஸ் விபத்து காரணமாக சுமார் 18 நாட்கள் தொழில் செய்வதற்கு தடைசெய்யப்பட்டிருந்தனர். அதற்காக இதுவரை இரண்டு கட்ட நஸ்ட ஈடு கிடைத்துள்ள நிலையில், மூன்றாவது கட்ட நஸ்ட ஈட்டினை வழங்குமாறு கோரிக்கை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது. – 06.09.2022

Related posts:

பொலிஸாரும் படையினரும் அந்தந்த மாவட்டங்களின் மக்கள் தொகைக்கு அமையவும் இன விகிதாசாரத்தைப் பேணும் வகை...
அரசின் திட்டங்கள் தமிழ்பேசும் மக்களுக்கு புரியும்படியாக அமையவேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. ...
மணலை அகழ்வு தொடர்பில் மீண்டும் விஞ்ஞான ரீதியான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் ...

அரச தொழிற் பயிற்சி நிலையங்களில் தமிழ் மொழி மூலமான பயிற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்! - டக்ளஸ் தே...
சகல பட்டதாரிகளையும் பட்டதாரி ஆளணிக்குள் உள்வாங்கி பொருத்தமான பதவிப் பெயர்களில் நியமனங்கள் வழங்கப்பட ...
அவதூறு பரப்பும் “விண்ணனிடம்”  – 1000 கோடி நட்ட ஈடு கோரும் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவா...