இலங்கையில் கடற்றொழில் சார் அபிவிருத்தியில் முதலீடு செய்வதற்கு டுபாய் முதலீட்டாளர்கள் ஆர்வம்!

Friday, September 2nd, 2022


இலங்கையில் கடற்றொழில் சார் அபிவிருத்தியில் முதலீடு செய்வதற்கு டுபாய் முதலீட்டாளர்கள் ஆர்வம் செலுத்தியுள்ளனர்.

அதனடிப்படையில், குறித்த முதலீட்டாளர்கள் இன்று  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை  சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்போது, நவீன முறையிலான புதிய மீன்பிடித் துறைமுகங்களை அமைப்பதற்கும், ஏற்றுமதித் தரத்திலான மீன்பிடிப் படகுகளை கட்டுகின்ற தொழிற்சாலைகளையும் அமைப்பதற்கான விருப்பத்தினை தெரிவித்தனர்.

குறித்த விடயங்களை வரவேற்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முன்னெடுக்க விரும்புகின்ற திட்டங்கள் தொடர்பான திட்ட வரைபுகளை சமர்ப்பிக்குமாறு முதலீட்டாளர்களை கோரியதுடன், நீர்வேளாண்மை விருத்தி தொடர்பாக பரந்தளவான வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளில் கடற்றொழில் அமைச்சு ஈடுபட்டுள்ளமையினால், அதுதொடர்பாகவும் அவதானம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டார். – 02.09.2022

Related posts:

துணைவியாரின் பிரிவால் துயருற்றிருக்கும் சீ.வீ.கே.சிவஞானத்திற்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஆறு...
கிடைத்த அதிகாரத்தின் மூலம் அழிந்த கிளிநொச்சியை தூக்கி நிறுத்தியவர்கள் நாமே கிளி.மக்கள் மத்தியில்...
சுயலாப அரசியலுக்காகவே திலீபன் நினைவுகூரப்படுகின்றார் - பகிரங்க விவாதத்திற்கு அழைக்கின்றார் அமைச்சர் ...

ஜெனீவா பிரேரணை எதிர்ப்பதற்கும் வரவேற்பதற்கும் எதுவுமில்லாதது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி.சுட்டிக்க...
சவால்களை வெற்றி கொள்ள ஒன்றிணைந்து செயற்படுவோம் - புத்தாண்டு நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப...
அபிவிருத்தியை இலக்காக கொண்ட வேலைத் திட்டங்களின் போது அடையாளப்படுத்தப்பட்ட விவகாரங்களுக்கு அமைச்சர் ட...