தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் வடகடல் நிறுவன வலைத் தொழிற்சாலையை செயற்படுத்த எதிர்பார்ப்பு- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Wednesday, August 31st, 2022


….
வடகடல் நிறுவனத்தின் வலை உற்பத்தி தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்றவர்களை, பங்குதாரர்களை கொண்டு தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் வலைத் தொழிற்சாலைகளை செயற்படுத்த எதிர்பார்ப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

லுணுவல தொழிற்சாலையை சேர்ந்த பணியாளர்களை இன்று சந்தித்துக் கலந்துரையாடிய போது, மேற்கண்டவாறு தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், தற்காலிகமாக 5 பணியாளர்களைக் கொண்ட  குழுவொன்றிற்கான விபரங்களை தருமாறும், அதனூடாக  தொழிற்சாலை செயற்பாடுகளை தற்காலிகமாக முன்கொண்டு செல்வதற்கான ஒத்துழைப்பினை வழங்குவதாகவும் தெரிவித்தார்.

தோல்வியடைந்த அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவது தொடர்பாக ஜனாதிபதி கருத்து தெரிவித்துள்ள நிலையில், கடந்த கால அரசாங்கத்தின் வினைத்திறன் அற்ற செயற்பாட்டினால் பின்னடைவை சந்தித்துள்ள  வடகடல் நிறுவனத்தினையும் அந்நிறுவனத்தின் பணியாளர்களையும் பங்குதாரர்களாக கொண்டு தனியார் முதலீட்டாளர்களை உள்ளீர்ப்பது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. – 31.08.2022

Related posts:

மாகாணசபையை பொறுப்பெடுத்து அதை அர்த்தமுள்ள நிர்வாகமாக செயற்படுத்த விரும்புகின்றேன் - டக்ளஸ் எம். பி. ...
தமிழர்களின் உரிமைகளுக்கும் உயர்ந்த வாழ்கை தரத்திற்கும ஒரே வழிமுறை ஈ.பி.டி.பி. யின் பொறிமுறைதான் : அம...
கிளிநொச்சி விவசாய ஆராய்ச்சி நிலைய தொழிலாளர்கள் நிரந்தர நியமனத்துக்கு வகை செய்து தருமாறு அமைச்சர் டக்...

வளங்களை இனங்கண்டு  கைத்தொழிலை ஊக்குவிக்க வேண்டும்  - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!
சட்டவிரோத கடற்றொழிலை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிககைகள் தொடர்பில் துறைசார் அதிகாரிகளு...
ஈ.பி.டி.பியின் நல்லூர் பிரதேச நிர்வாகத்தினருடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடல்!