துவிச்சக்கர வண்டி விற்பனை சடுதியாக வீழ்ச்சி – துவிச்சக்கர வண்டி இறக்குமதியாளர்கள் கவலை!
Tuesday, August 16th, 2022
துவிச்சக்கர வண்டிகளின் விற்பனைகள் சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளன. துவிச்சக்கர வண்டி இறக்குமதியாளர்கள் மற்றும் உதிரிபாக விற்பனையாளர்கள் சங்கத்தின் இணை செயலாளர் ரிஸ்னி இஸ்மத் தெரிவித்துள்ளார்.
துவிச்சக்கர வண்டிகளின் விற்பனைகள் வீழ்ச்சியடைந்துள்ளதன் காரணமாக அதன் விலைகளும் வெகுவாக குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக துவிச்சக்கர வண்டிகளுக்கான கேள்வி அதிகரித்து காணப்பட்டது.
இதன்காரணமாக துவிச்சக்கர வண்டிகளின் விலைகள் சடுதியாக அதிகரித்திருந்தததுடன் அதற்கான தட்டுப்பாடுகளும் ஏற்பட்டிருந்தன.
தற்போது, தட்டுப்பாடு இன்றி எரிபொருள் கிடைக்கின்றமையால் துவிச்சக்கர வண்டிகளின் பயன்பாடு குறைடைந்துள்ளதாக துவிச்சக்கர வண்டி இறக்குமதியாளர்கள் மற்றும் உதிரிபாக விற்பனையாளர்கள் சங்கத்தின் இணை செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்க தீர்மானம்!
தீ காயங்களுடன் சிகிச்சை பெற்றுவந்த இளம் குடும்ப பெண் பலி - ஆறுகால்மடம் பகுதியில் சோகம்!
இலங்கையின் முன்னேற்றத்திற்கு டிஜிட்டல் தொழிநுட்பத்தை பயன்படுத்த வேண்டும் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்...
|
|
|


