இலங்கை வந்தடைந்த மேலும் இரண்டு எரிபொருள் கப்பல்கள் – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சனா விஜேசேகர தெரிவிப்பு!
Friday, July 22nd, 2022
உலை எண்ணெய் மற்றும் பெட்ரோல் கப்பல் ஒன்று நேற்று இலங்கை வந்ததாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சனா விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருட்களுக்கான தரபரிசோதனை எடுக்கப்பட்டதன் பின் எரிபொருள் தரையிறக்கம் ஆரம்பமாகும்.
உலை எண்ணெய் மின் உற்பத்தி நடவடிக்கைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளது.
மேலும், வாகன இலக்கத்தட்டின் இறுதி இலக்க முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டுவருவதாகவும், தேசிய எரிபொருள் அட்டைக்கான QR குறியீடு சரிபார்ப்பு மற்றும் பதிவு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறித்த பதிவில் குறிப்பிட்டார்.
Related posts:
பேருந்துகளை திருத்த 3000 மில்லியன்!
காலநிலை மாற்றம் – பாடசாலை மாணவர்களுக்கு எச்சரிக்கை!
வர்த்தக மாபியாக்களை தடுக்க விரைவில் புதிய வேலைத்திட்டம் - வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவிப்...
|
|
|


