நெடுந்தீவு மக்களுக்கு மேலதிக வருமானத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Wednesday, June 15th, 2022

நெடுந்தீவு மக்களுக்கு மேலதிக வருமானத்தினை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நெடுந்தீவின் கரையோரப் பிரதேசங்களில் சேருகின்ற கடல்பாசிகளை சேகரித்து ஏற்றமதி செய்வதற்கான அனுமதியைப் பெற்றுத்தருமாறு, நெடுந்தீவு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க நிர்வாகிகளினால் கடற்றொழில் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த கோரிக்கை தொடர்பாக ஆராய்ந்து தேவையான அனுமதிகளை வழங்குமாறு தெரிவித்தார்.

இதன்மூலம் நெடுந்தீவில் வாழ்ந்து வருகின்ற சுமார் 300 குடும்பங்களுக்கு மாதந்தோறும் சுமார் 50,000 ரூபாய் மேலதிக வருமானம் கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

ஒன்றிணைந்த செயற்பாடுகளினூடாக பிரதேசத்தின் அபிவிருத்தியை கட்டியெழுப்புவோம் - ஊர்காவற்றுறையில் செயலாளர...
பொதுத் தீர்மானங்ககளின் அடிப்படையில் செயற்படுங்கள் – தீவகப் பிரதேச செயற்பாட்டாளர்கள் மத்தியில் செயலாள...
அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை - கௌதாரிமுனை பிரதேச மக்களுக்கு இடர்கால உலர் உணவுப்பொதி விநியோகம்!

மனிதாபிமான ரீதியில் அவதானம் செலுத்துங்கள் - நீதி அமைச்சரிடம் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள்!
முறைகேடு இருப்பதாக தெரியவந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் - மீன் இறக்குமதி தொடர்பில் அமைச்சர்...
இன்றைய சூழலில் நாட்டுக்கும் மக்களுக்கும் ரணிலின் எரிவாயு சிலிண்டர் சின்னத்தின் வெற்யே அவசியமாகும் - ...