நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் பிரதமர் விசேட உரை – நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து மூன்று நாள் விவாதம் நடத்தப்படும் என்றும் தெரிவிப்பு!
Thursday, June 2nd, 2022
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் விசேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (02) நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரக் குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இதனை தெரிவித்தார்.
அடுத்த வாரம் செவ்வாய்முதல் வெள்ளி வரை நாடாளுமன்றம் நடைபெறும் என்றும், நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து மூன்று நாள் விவாதம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
STF இற்கு புதிய கட்டளை அதிகாரியாக பிரதி பொலிஸ் மாஅதிபர் லயனல் குணதிலக்க நியமனம்!
20 ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்கள் - அரசாங்கம் தீர்மானம்!
வர்த்தகம், முதலீடு மற்றும் மேம்பாட்டு உதவிகள் குறித்து ஜப்பானின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் டேக்கி...
|
|
|


