உக்ரைனின் கிழக்குபகுதிக்கு ரஸ்ய படையினரை அனுப்புமாறு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உத்தரவிட்டுள்ளார்

Tuesday, February 22nd, 2022

உக்ரைனின் கிழக்கு பகுதியில் ரஸ்ய சார்பு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இரு பகுதிகளை சுதந்திரமான பகுதிகளாக அங்கீகரித்த பின்னர் புட்டின் இந்த உத்தரவை வெளியிட்டு;ள்ளார்.

கிளர்ச்சிக்காரர்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள டொனெஸ்க் நகரத்தின் ஊடாக ரஸ்ய டாங்கிகளும் ஏனைய இராணுவ தளபாடங்களும் செல்வதை பார்க்கமுடிகின்றது என ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.

கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டின் உள்ள பகுதிகளை சுதந்திரமான பகுதிகளாக அங்கீகரிக்கும் ஆணையை வெளியிட்டுள்ள புட்டின் அங்கு அமைதியை நிலைநாட்டுவதற்காக படையினரை அனுப்பிவைக்குமாறு தனது பாதுகாப்பு அமைச்சரிற்கு உத்தரவிட்டுள்ளார்.

தொலைக்காட்சி உரையொன்றில் மேற்குலகை கடுமையாக சாடியுள்ள புட்டின் உக்ரைனை ரஸ்யாவின்வரலாற்றின் ஒருபகுதி என வர்ணித்துள்ளதுடன் கிழக்கு உக்ரைன்; புராதன ரஸ்யாவின் நிலம் என தெரிவித்துள்ளார்.

000

Related posts: