வல்வெட்டித்துறை – ஊறணி பிரதேச வைத்தியசாலையில் தடைப்பட்டிருந்த மருத்துவ சேவையை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!
Saturday, February 19th, 2022
வல்வெட்டித்துறை, ஊறணி பிரதேச வைத்தியசாலையில் தடைப்பட்டிருந்த மருத்துவ சேவையை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாதியர் பற்றாக்குறை காரணமாக குறித்த வைத்தியசாலையினன் மருத்துவ விடுதி(ward service) சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பிரதேச மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர் கு.கமலதாஸினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
இதனையடுத்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடிய கடற்றொழில் அமைச்சர், குறித்த வைத்தியசாலையின் விடுதி சேவையை இயங்க வைப்பதற்கு தேவையான தாதியர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளா
000
Related posts:
இரணைமடு குளத்தில் ஒரு இலட்சம் மீன்குஞ்சுகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் விடப்பட்டது!
வட கடல் நிறுவனத்தின் யாழ். பிராந்திய பணியாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து நடைமுறைப் பிர...
நாரந்தனை மக்களுடன் செயலாளர் நாயகம் டக்ளஸ்!
|
|
|


