இலங்கையில் கார் உற்பத்தி செய்வது தொடர்பில் கவனம் – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவிப்பு!
Thursday, February 3rd, 2022
இலங்கையில் கார் உற்பத்தி செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வாகன இறக்குமதியை ஆரம்பிப்பது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்காலத்தில் மின்சார வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 9 ஆவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வின் ஆரம்ப நாளின் போது தனது கொள்கை பிரகடனத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நெடுந்தீவுக்கான இலவச குடிநீரை தடுத்து நிறுத்தியது கூட்டமைப்பு!
பாக்கிஸ்தான் கடற்படை அதிகாரி இலங்கை வருகை !
குழந்தையுடன் யாசகம் பெற்று வந்த பெண் , யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு கடுமையாக எச்சரிக்க...
|
|
|


