இலங்கையில் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தடுப்பூசியின் பூஸ்டர் செலுத்துகையை பெற்றுள்ளனர்!

Thursday, January 27th, 2022

இலங்கையில் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தடுப்பூசியின் மூன்றாவது டோஸான பூஸ்டர் டோஸை பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

குறிப்பாக நேற்றையதினத்தில் 30 ஆயிரத்து 325 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸின் மற்றொரு சாத்தியமான அதிகரிப்பைத் தடுக்க, பூஸ்டர் டோஸைப் பெறுவதற்கு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை ஊக்குவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Related posts: