நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்புதிர் அறுவடை விழா இன்று!
Monday, January 17th, 2022
நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்புதிர் அறுவடை விழா இன்று 17 ஆம் திகதி காலை இடம்பெற்றது.
தைப்பூசத்தினத்துக்கு முதல்நாள் கடைப்பிடிக்கப்படும் இந்தப் பண்பாட்டு விழாவில் கோவில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது புதிரை அறுவடை செய்ய ஆலயத்துக்குச் சொந்தமான மட்டுவிலில் உள்ள வயலுக்குச் செல்வார்கள் .
அந்த வயலில் அறுவடை செய்யும் நெல்லில் இருந்து அமுது தயாரித்து கந்தனுக்கு படையல் செய்து பூசைகள் இடம்பெற்றன .
அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கும் அமுது வழங்குதல் மரபாக பண்பாட்டு விழாவாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்தப் புதிர் விழா 288 ஆவது ஆண்டாக இந்த வருடமும் கடைப்பிடிக்கப்பட்டது.
Related posts:
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுகின்றது பிரித்தானியா!
527 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்!
நாட்டின் அபிவிருத்தியை முடக்க இடமளிக்க முடியாது – ஜனாதிபதி!
|
|
|


