புதிய ரம்புட்டான் அறிமுகம்!
Saturday, August 20th, 2016
நாட்டின் காலநிலைக்கேற்ப அனைத்து காலங்களிலும் அறுவடைக்கு கிடைக்க கூடிய ரம்புட்டான் வகையொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரம்புட்டானுக்கான கேள்வி அதிகரித்துள்ளமையின் காரணமாக இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பழ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. சந்தைகளில் காணப்படும் கேள்விகளுக்கு அமைய ரம்புட்டான் அறுவடை இல்லை என தெரியவந்துள்ளது. எனவே, அனைத்து காலங்களிலும் அறுவடைக்கு கிடைக்க கூடிய ரம்புட்டான் வகையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு பழ ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக விவசாயிகளுக்கு அறிவுறுத்தும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பழ ஆராய்ச்சி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது
Related posts:
25 அரச நிறுவனங்களிடமிருந்து கணக்காய்வாளர் அறிக்கை கிடைக்கவில்லை! - கணக்காய்வாளர் திணைக்களம்!
வடக்கு மாகாணத்துக்கு 9 தாதியர்கள்!
கடந்த 6 நாட்களில் ஏற்பட்ட வீதி விபத்துக்களில் 30 பேர் உயிரிழப்பு - பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹ...
|
|
|


