அர்ஜுன் மகேந்திரன் இன்றி வழக்கை நடத்திச்செல்ல நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் அனுமதி!
Tuesday, July 20th, 2021
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் இன்றி, மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கை நடத்திச்செல்ல நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
2016 மார்ச் 29 ஆம் திகதி இடம்பெற்ற பிணைமுறை ஏலத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்த மோசடி வழக்கில், அக்காலப்பகுதியில் மத்திய வங்கி ஆளுநராக பதவி வகித்த அர்ஜுன் மகேந்திரன் மற்றும் அவரது மருமகனான பர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்டோருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவந்த நிலையில், அர்ஜுன் மகேந்திரன் சிங்கப்பூருக்கு தப்பிச்சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இலங்கை கடல் எல்லையில் கடல்சார் எதிர்வுகூறல் கட்டமைப்பை அமைப்பதற்கு 5 இலட்சம் டொலர் பெறுமதியான முதலீட...
தொழிற்சங்க நடவடிக்கையே எரிபொருள் விநியோக தாமதத்திற்கு காரணம் - மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை - போ...
பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு...
|
|
|


