புதிய ஆண்டில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆராய்வு!

Tuesday, January 4th, 2022

கடற்றொழில் அமைச்சின் ஊடாக புதிய ஆண்டில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்கள் உட்பட்ட வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.

கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்க, கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹாவத்த மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சின் வேலைத் திட்டங்களை மக்கள் பலனடையும் வகையில் முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தினை வலியுறுத்திய கடற்றொழில் அமைச்சர், தேவையான ஆலோசனைகளையும் வழங்கினார்.

000

Related posts:

வெளிவாரி பட்டதாரி பயிலுனர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் – டக்ளஸ் எம்பி வலியுறுத்து!
வடக்கில் நீர்வேளாண்மையை ஊக்குவிப்பதற்கு சுமார் 14 கோடி ரூபாய் – நீடித்த நன்மைகளை உறுதிப்படுத்துமாறு ...
பனை அபிவிருத்தி சபைக்கு இரு புதிய உறுப்பினர்கள் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நியமனக் கடிதங்கள் ...