விரிவுரைகள் உள்ளிட்ட செயற்பாடுகளை ஆரம்பிக்க பல்கலைக்கழகங்களுக்கு இன்றுமுதல் அனுமதி – பல்கலை மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவிப்பு!
Wednesday, December 29th, 2021
சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி 50 வீத மாணவர்களின் பங்குபற்றலுடன் இன்று (29) முதல் விரிவுரைகள் உள்ளிட்ட செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனை அறிவித்துள்ளார்.
இதன் பிரகாரம், பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான நடைமுறைகளை முன்னெடுக்குமாறு துணைவேந்தர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் நேற்றிரவு (28) நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே, கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பிலான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பரீட்சைகளுக்குரிய விண்ணப்பங்கள் அனைத்தும் இனி இணையம் மூலம் விண்ணப்பிக்க முடியும்!
எமது மனிதநேயத் திட்டம் சர்வதேச ஆதரவைப் பெறுகின்றது – அதை சிரழிக்க வேண்டாம் என வெளிநாட்டு அமைச்சர் த...
டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழை துரிதமாக வெளியிட நடவடிக்கை - இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவிப்ப...
|
|
|
கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சைகள் அறிவிக்கப்பட்ட திகதியிலேயே நடைபெறும் - கல்வி அமைச்சின் செய...
மின் பிறப்பாக்கிகள் சீரமைக்கப்பட்டுவரும் நாட்டின் சில பகுதிகளில் தொடர்ந்தும் மின் தடை ஏற்படக்கூடும் ...
இந்தியா, சீனா வழங்கும் ஒத்துழைப்புகளை ஒருபோதும் மறக்க முடியாது - நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசீம் த...


