எரிவாயு தட்டுப்பாடு இரண்டு வாரங்களின் பின்னர் நீங்கும்!
Wednesday, December 29th, 2021
தற்போது நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு, மேலும் இரண்டு வாரங்களின் பின்னர் நிவர்த்தியாகும் என லிட்ரோவைப் பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.
எரிவாயுவைத் தாங்கிவந்த கப்பலொன்று, மீளத் திருப்பி அனுப்பப்பட்டமையால், எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அதன் செயலாளர் டெரன்ஸ் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம், மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சில பிரதேசங்களுக்கு சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெற்றதுடன், சில பகுதிகளுக்கு போதுமான அளவு எரிவாயு கிடைக்கவில்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிணங்க தங்களுக்கு போதுமான அளவு சமையல் எரிவாயு கிடைக்கவில்லை நுகர்வோரும், எரிவாயு விற்பனையாளர்களும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மார்ச் மாத இறுதியில் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கு நியமனம்!
நடுத்தர வருமான வீடுகள் டொலருக்கு விற்கப்படும் திட்டத்தின் கீழ் 500,000 அமெரிக்க டொலர்களுக்கு மேல் வர...
நாடில் உச்சத்தைத் தொட்ட டெங்கின் தாக்கம்!
|
|
|


