பேக்கரி உற்பத்திகளின் விலையும் அதிகரிக்க வாய்ப்பு!

Monday, October 11th, 2021

கோதுமை மாவின் விலை அதிகரித்துள்ளமையினால் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவன கோதுமை மா ஒரு கிலோவின் விலை நள்ளிரவுமுதல் 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் சமையல் எரிவாயுவின் விலையும் நேற்று நள்ளிரவு முதல் உயர்வடைந்துள்ளது. இந்த நிலையிலேயே பாண் உட்பட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு பேக்கரி உரிமையாளர்கள் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் இது தொடர்பான இறுதித் தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை என்றும் விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

000

Related posts:

காலவரையறையின்றி மூடப்பட்டது கட்டுநாயக்க விமான நிலையம் - ஜனாதிபதியின் மேலதிக செயலார் ஜயனாத் கொலம்பகே ...
சிறுமி ஹிஷாலினியின் அறையில் சிக்கிய முக்கிய சாட்சி – 40 பேரிடம் வாக்குமூலம் பெற்ப்பட்டுள்ளதாக பொலிஸ்...
அரச அலுவலகங்களுக்காக வீணடிக்கப்படும் பெருந்தொகை பணம் - சபையில் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி...

வட மாகாணத்தில் உற்பத்தியாகும் உணவுப் பொருட்களுக்கு  சந்தைவாய்ப்புப்  பெற்றுக் கொடுக்க நடவடிக்கை!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைதானோர் தொடர்பில் பரிந்துரைகளை முன்வைக்க ஆலோசனை சபை – ஜனாதிபதி கோட்டபய...
இந்திய மன்றம் மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அழைப்பு - அவுஸ்திரேலியாவிற்கு பயணமானார் ஜனாதிபதி ...