கொரோனாவின் பின்னரான சிகிச்சை திட்டத்தை தொடங்க அமைச்சு முடிவு – இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயக்கொடி தெரிவிப்பு!
Friday, September 10th, 2021
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு கொரோனாவின் பின்னரான சிகிச்சை திட்டத்தை தொடங்க சுதேச வைத்திய முறைகளின் மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி அமைச்சு முடிவு செய்துள்ளது.
ஆயுர்வேத மருத்துவத்துறையில் கொவிட் நோயால் பாதிக்கப்பட்டு மீண்ட நோயாளிகளுக்கான நோய்க்கு பின்னரான சிகிச்சை திட்டத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்த பின்னரான ஏனைய நோய் தொற்றுகள் மற்றும் உயிரிழப்புகள் நேரிடுவதை தடுக்கும் நோக்குடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று, சுதேச வைத்திய முறைகளின் மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதார இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்
Related posts:
அராலியில் இளம் குடும்பஸ்தர் மீது வாள் வெட்டு!
உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!
இலங்கை இயல்பு நிலைக்கு வருவதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகும் - நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க...
|
|
|


