தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 665 பேர் கைது – பொலிஸ் ஊடகப் பிரிவு தகவல்!
Tuesday, September 7th, 2021
நிறைவடைந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 665 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்தக் காலப்பகுதியில், 69 வாகனங்களும் பொலிசாரால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, நாட்டில் இதுவரையில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 66 ஆயிரத்து 668 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அடுத்த மாதம் 150,000 தென்னங்கன்றுகள் வழங்கப்படும் - தெங்கு அபிவிருத்தி சபை!
கடலில் மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமற்போன தந்தை, மகன் சடலங்களாக மீட்பு!
வாக்குச் சீட்டின் நீளம் அதிகரிப்பு - பொது மக்களின் 200 மில்லியன் பணம் மேலதிகச் செலவு என தேர்தல்கள் ...
|
|
|


