கோழி உரித்து இறைச்சி விற்க தடை – வலிகாமம் வடக்கு பிரதேச சபை அறிவிப்பு!
Monday, January 4th, 2021
வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் கோழி இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச சபை தெரிவித்துள்ளது.
அத்துடன் வலி.வடக்கு பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பொது சந்தைகளில் மாத்திரமே கோழிகளை உரித்து இறைச்சியாக்கி விற்பனை செய்ய முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சபையின் ஆளுகைக்கு உட்பட்ட ஏனைய பகுதிகளில் உரித்து இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும் அது எதிர்வரும் 15 ஆம் திகதிமுதல் நடைமுறைக்கு வருமென தெரிவிக்கப்பட்டள்ளது.
இந்த விதிமுறைகளை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதேச சபை எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்ப்பாணதத்தில் 10 சதவீதம் நெல் அழிவு -யாழ்.மாவட்ட விவசாயக் குழு!
வறட்சி நிலவும் பிரதேசங்களுக்கு இராணுவ உதவி : ஜனாதிபதி
டெங்கு காய்ச்சல் - யாழ்ப்பாணத்தில் 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு!
|
|
|


