ஊரடங்கு தொடர்பில் இன்று மாலைக்குள் தீர்மானிக்கப்படும் – இராணுவத் தளபதி தெரிவிப்பு!
Friday, September 3rd, 2021
நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கலாமா? அல்லது வேண்டாமா என்ற முடிவு இன்று (03) மாலைக்குள் அறிவிக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், கொரோனாவை ஒழிக்கும் தேசிய செயலணி இன்று ஜனாதிபதி தலைமையில் கூடி உண்மை நிலையை ஆராயும். பின்னர் தனிமைப்படுத்தல் ஊரடங்கு குறித்து முடிவு எடுக்கப்படும் என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொரோனா பரவலை தடுப்பதற்கு நாடளாவிய ரீதியில் 18 ஆம் திகதி இரவு 10.00 மணி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்த தனிமைப்படுத்தல் உத்தரவு 6ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உரிய நேரத்தில் ஒட்சிசனை வழங்கியமைக்காக இந்தியாவுக்கு அரசாங்கம் நன்றி தெரிவித்த இலங்கை!
இலவச காணி உறுதிகளை காணி சீர்திருத்த ஆணைக்குழு வழங்க வேண்டும் - மக்கள் கோரிக்கை!
TV க்கு படம் காட்டும் திட்டமே கிளீன் ஸ்ரீலங்கா - யாழ் மாநகரசபையின் வடபிராந்திய தொழிற் சங்க தலைவர் ஜோ...
|
|
|


