மருத்துவமனைகளிலுள்ள பிராணவாயுவின் அளவு குறித்து நாளாந்த கண்காணிப்பு – உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு சுகாதார அமைச்சர் பணிப்பு!

Thursday, September 2nd, 2021

நாட்டிலுள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் கொவிட் நோயாளர்களுக்கு வழங்கப்படும் பிராணவாயுவின் அளவு தொடர்பில் நாளாந்தம் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நாட்டின் நாளாந்த பிராணவாயு உற்பத்தி 80 தொன் ஆகும். எனினும் தற்போது அந்த உற்பத்திக் கொள்ளளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா பரவலுக்கு முன்னர் நாட்டில் நாளாந்த பிராணவாயு தேவைப்பாடு 20 முதல் 25 தொன் வரை இருந்தது.

இந்நிலையில், பிராணவாயு தேவைப்படும் அனைத்து நோயளர்களுக்கும் அவசியமான பிராணவாயுவினை பற்றாக்குறையின்றி வழங்குவதற்கு எடுக்கவேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

Related posts:

வடக்கிலிருந்து பொலிஸ் பதவிக்கு விண்ணப்பிப்போருக்கு வடக்கிலேயே பயிற்சி - யாழ் வந்த பொலிஸ் மா அதிபர் ...
பல்கலைக்கு அனுமதிக்கப்படும் மாணவர் விபரம் வெளியானது - புதிதாக நான்கு பீடங்களும் உருவாக்கம் - மானியங்...
புதிய வரிக் கொள்கைகளுக்கு அமைய வாகன இறக்குமதிக்கான மொத்த வரி 500 சதவீதமாக அதிகரிக்கப்படக் கூடும் - எ...