தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 667 பேர் கைது – 63 வாகனங்கள் பறிமுதல் என பொலிசார் தெரிவிப்பு!
Saturday, August 28th, 2021
தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 667 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 63 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய, தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் கடந்த ஒக்டோபர்முதல் இதுவரை 60 ஆயிரத்து 288 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தின் எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள 13 வீதிச் சோதனை சாவடிகளில் மேல் மாகாணத்துக்குள் பிரவேசித்த 641 வாகனங்களில் பயணித்த ஆயிரத்து 128 பேர் சோதனையிடப்பட்டுள்ளனர்.
அத்துடன், மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறிய 500 வாகனங்களில் பயணித்த 901 பேரும் பொலிசாரால் சோதனையிடப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
FCID யின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் அத்தியட்சகராக நியமனம்!
ஆசனங்களுக்கு அமைவாக பயணிகளை ஏற்றிச் செல்வது சட்டமாக்கப்படும் - போக்குவரத்து அமைச்சர்!
நாடாளுமன்றம் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை கூடும் - நாடாளுமன்றத்தின் பதில் செயலாளர் ...
|
|
|


