கடந்த 24 மணிநேரத்தில் மேலும் ஆயிரத்து 737 பேருக்கு கொவிட் தொற்று!
Sunday, July 25th, 2021
நாட்டில் கடந்த 24 மிணித்தியாலங்களில் ஆயிரத்து 737 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.
அவர்களில் ஆயிரத்து 707 பேர் புத்தாண்டு கொத்தணியில் பதிவாகியுள்ளதுடன், 30 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டவர்களாவர்.
அதனடிப்படையில் இதுவரையிலான மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 94 ஆயிரத்து 850 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 957 பேர் நேற்று குணமடைந்துள்ளனர். இதற்கமைய, தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 66 ஆயிரத்து 665 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
2017 ஆம் ஆண்டுக்கான பரீட்சைகளின் நேர அட்டவணை வெளியானது!
தேர்தல் சட்ட மீறல்: 167 பேர் கைது - பொலிஸ் தலைமையகம்!
பிரதமர் தினேஸ் குணவர்தன அடுத்த வாரம் சீனாவுக்கு விஜயம் - கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கவனம் செலுத்தப...
|
|
|


