மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவைகள் இன்றுமுதல் ஆரம்பம் !
Wednesday, July 14th, 2021
நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்ட நிலையில், அத்தியாவசிய தேவைகள் மற்றும் சேவைகளுக்காக மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவைகள் இன்று மீளவும் ஆரம்பமாகியுள்ளன.
இதனடிப்படையில் 14 தூரப் பயண தொடருந்துகள் மாகாணங்கள் கடந்த சேவைக்காக இயங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரமே இந்த தொடருந்து சேவைகளைப் பயன்படுத்த முடியும்.
அதேவேளை, மாகாணங்களுக்கு இடையில் அத்தியாவசிய சேவைகளுக்காக 500 பேருந்துகள் இன்றுமுதல் சேவையை முன்னெடுத்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.
அதேபோன்று தனியார் பேருந்துகளும் இன்றுமுதல் மாகாணங்களுக்கு இடையிலான சேவையை ஆரம்பித்துள்ளதாகவும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அற்ப சிந்தனையாளர்கள் நாட்டை தீயிடுவதற்கு இடம் அளிக்ககூடாது - இராஜாங்க அமைச்சர் டிலான்!
அடுத்த 10 ஆண்டுகளில் உலகளவில் 5 மில்லியனுக்கும் குறைவான பெண் குழந்தைகளே பிறக்கும் - சர்வதேச ஆராய்ச்ச...
யாழ் வலம்புரியில் கோலாகலமாக ஆரம்பமானதுகனடா கல்விக் கண்காட்சி!
|
|
|


