சதோச நிறுவனம் ஊடக அத்தியாவசி பொருட்களின் வீட்டு விநியோக விற்பனைச் சேவை:
Tuesday, June 1st, 2021
கோவிட் நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் பொருட்டு தற்போது நடமாட்ட கட்டுப்பாடு நாடளாவ நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களை மக்களின் வீடுகளுக்கே வநியோகித்து விற்பனை செய்யும் நடைமுறை நாடெங்கும் பின்பற்றப்பட்டு வருகின்றது.
நாடளாவிய ரீதியில் பல தனியார் வணிக நிறுவனங்கள் இவ்வாறு பொருட்களை வீடுகளுக்கு விநியோகிக்கும் பணியை முன்னெடுத்து வருகின்றன.
அந்த வகையில், சதோச நிறுனத்தின் ஊடாக அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கே வநியோகித்து விற்பனை செய்யும் ஒழுங்குகளை, நாடளாவிய ரீதியில் அரசாங்கமும் செய்துள்ளது.
இந்த பணியை மேற்கொண்டுள்ள சதோச நிறுவனத்தின் பணியாளர்கள், நிர்வாகத்தினர் மற்றும் நிறுவனத் தலைவர் ஆகியோருக்கு எனது நன்றிகள்!
சதோச நிறுவனத்தின் விநியோக விற்பனை சேவையைப் பெற்றுக்கொள்ள அழையுங்கள் – 1998.
Related posts:
வறிய நாடுகளால் 2022 ஆம் ஆண்டிலும் கொவிட் தொற்று மீண்டும் பரவும் - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!
மருந்து விலைகள் அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி இரண்டு நாட்களில் வெளியாகும் - அமைச்சின் செயலாளர் வைத்...
சீனாவில் இருந்து 10,000 தண்டவாளங்கள் இறக்குமதி - புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் தெரிவிப்பு...
|
|
|


