தீ விபத்துக்கு உள்ளான கப்பலின் தலைவர் உள்ளிட்டவர்களிடம் வாக்குமூலம்!
Sunday, May 30th, 2021
தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலின் தலைவர் உள்ளிட்ட பணிக்குழாமினரிடம் வாக்குமூலம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அவர்களிடம் நாளை திங்கட்கிழமை வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
குறித்த கப்பல் தீப்பிடித்த விடயம் தொடர்பாக அவர்களிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளது. கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிடப்பட்டிருந்த எக்ஸ் பிரஸ் பேர்ல் கப்பலில் நைட்ரையிட் கசிவு காரணமாக கடந்த 19 ஆம் திகதி தீப்பரவல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பஸ், ரயில் மற்றும் வேறு நடவடிக்கைகளுக்கு முற்பண கொடுப்பனவு அட்டை அறிமுகம்!
ஆரம்பமாகிறது காங்கேசன்துறை-காரைக்கால் இடையேயான கப்பல் சேவை - வெளியானது அறிவிப்பு!
இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு - முன்மொழியப்பட்ட வரைபடத்திற்கும் கால அட்டவணைக்கும் அமைச்சரவை அங்கீக...
|
|
|


