கப்பலில் தீப்பரவல் – சூழல் பாதிப்புகள் குறித்து ஆராயப்படுவதாக இராஜாங்க அமைச்சர் நாலக்க கொடஹேவா தெரிவிப்பு!
Friday, May 28th, 2021
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீப்பரவலுக்குள்ளான கப்பலினால் ஏற்பட்டுள்ள சூழல் பாதிப்புகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் நாலக்க கொடஹேவா தெரிவித்துள்ளார்.
கப்பல் விபத்துக்குள்ளானமை தொடர்பில் முன்கூட்டியே இலங்கைக்கு அறிவிக்கப்படாமை குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கப்பல் தீப்பரவலுக்கு உள்ளாதினால் இலங்கையின் கடல் வளங்களுக்கு மற்றும் சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு கப்பலின் உரிமை நிறுவனமே பொறுப்பு கூறவேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
30,000 இலங்கையருக்கு அமெரிக்காவில் வேலை வாய்ப்பு!
மண்டைதீவு கடலில் தடம்புரண்ட இ.போ.ச பேருந்து! - 16 பேர் காயம்
போலி நாணயத்தாளுடன் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஐவர் கைது!
|
|
|


