பொதுமக்கள் சூழ்நிலையை கருத்திற்கொள்ளாது செயற்பட்டால் பயணக்கட்டுப்பாடுகளை விதிப்பதில் எந்தவித அர்த்தமும் இல்லை – ஜனாதிபதி சுட்டிக்காட்டு!

Tuesday, May 25th, 2021

நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனை சரியான முறையில் மேற்கொள்வதற்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் கொவிட் – 19 கட்டுப்படுத்தும் நிர்வாக குழு கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் பொதுமக்கள் தற்போது நாட்டில் நிலவும் சூழ்நிலையை கருத்திற் கொள்ளாது செயற்பட்டால் இவ்வாறு பயணக்கட்டுப்பாடுகளை விதிப்பதில் எந்தவித அர்த்தமும் கிடையாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


சுன்னாகம் குடிநீர்ப் பிரச்சினை தொடர்பான வழக்கு : தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அதிகாரிகள...
அதிபர்−ஆசிரியர் சம்பள முரண்பாடு தொடர்பிலான பிரச்சினைக்கு அடுத்தவாரம் தீர்வு - அமைச்சரவை பேச்சாளர் அம...
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள சிவில் அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள் சிலர் நாட்டில் அராஜகத்தை ஏற்படு...