15 நாட்களில் 430 டெங்கு நோயாளிகள் பதிவு !
Monday, May 17th, 2021
கடந்த 15 நாட்களில் நாடு முழுவதும் 430 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.
இந்த நோயாளிகளில் (150) பெரும்பான்மையானவர்கள் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என அப்பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜெயசேகர தெரிவித்தார்.
இந்த ஆண்டு இதுவரை இலங்கை முழுவதிலும் மொத்தம் 7,317 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
மேலும் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
000
Related posts:
நாளைமுதல் பாடசாலைகளுக்கு விடுமுறை!
நாடுகளுக்கிடையிலான அதிகாரச் சண்டைகளில் ஈடுபடுவதற்கு இலங்கை விரும்பவில்லை - நியூயோர்க்கில் ஜனாதிபதி ...
கொள்கை வட்டி விகிதங்களை தற்போதைய மட்டத்திலேயே தொடர்ந்தும் பேணுவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானம்!
|
|
|


