வித்தியா கொலை வழக்கின் சந்தேக நபர்களது விளக்கமறியல் நீடிப்பு!
Tuesday, August 9th, 2016
மாணவி வித்தியாவின் கொலை வழக்கில் கைதான 12 சந்தேகநபர்களின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
மாணவியின் கொலை வழக்கு இன்று (09) ஊர்காவற்துறை நீதவான் எம்.எம். றியாழ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனடிப்படையில் சந்தேகநபர்களை எதிர்வரும் செப்பெடம்பர் மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கின் 12 சந்தேகநபர்களும் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் பொலிஸாரினால் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
Related posts:
புகைத்தலுக்கு அடிமையாகும் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி!
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திலுள்ள அயலுறவுச் செயலகத்தில் சுமார் 100 விண்ணப்பங்கள் ஒருவார காலத்திற்குள...
ஏப்ரல் 21 தாக்குதல் விசாரணைகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான்...
|
|
|


