காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கு மேலும் சலுகைக் காலம் – மோட்டார் வாகன திணைக்கள ஆணையாளர்!
Monday, May 3rd, 2021
கொரோனா பரவல் காரணமாக காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரங்களுக்காக மூன்று மாதம் மற்றும் ஆறு மாத நிவாரண காலம் வழங்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன திணைக்கள ஆணையாளர் சுமித் அழககோன் தெரிவித்துள்ளார்.
இதன்படி மார்ச் 21 ஆம் திகதி முடிவடையும் சாரதி அனுமதிப் பத்திரத்திற்காக மூன்று மாத கால நிவாரண காலம் வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளர்.
அதேவேளை ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து செப்ரெம்பர் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் காலாவதியாகும் வாகன சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கான ஆறு மாத கால நிவாரண காலம் வழங்கப்படும் எனவும் ஆணையாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வாகனம் மோதி வட்டுக்கோட்டை இளைஞர் பலி - இணுவிலில் சம்பவம்!
சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி நடைமுறை - இன்று நள்ளிரவுமுதல் தொலைபேசி கட்டணங்களில் திருத்தம்!
2024ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி - எதிர்வரும் டிசம்பர் 13 ஆம் ...
|
|
|


