கொரோனா அதிகரித்து சென்றாலும் நாட்டை முடக்கப்போவதில்லை – ஜனாதிபதி தெரிவிப்பு!
Saturday, April 24th, 2021
கொரோனா அதிகரிப்பு காரணமாக நாட்டை முடக்கப்போவதில்லை என ஜனாதிபதி சுகாதாரப் பிரிவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கொவிட் தொற்று பரவலைத் தடுக்கும் ஜனாதிபதி செயலணி கூட்டத்தில் நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் தொடர்பில் தீர்மானங்கள் பல மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கமைவாக அனர்த்தநிலை தொடர்பில் பொதுமக்களுக்கு தெளிவு படுத்துவதற்கு விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி சுகாதாரப் பிரிவுக்கு அறிவித்துள்ளார்.
எந்த வகையிலும் நாட்டை முடக்குவதற்கும், அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளவும் அவற்றை வரையறுப்பதற்கும் தீர்மானம் மேற் கொள்ளவில்லை என சுகாதார அமைச்சுக்கு தெரிவித்துள்ளார்.
இருப்பினும் பொதுமக்கள் ஒன்றுகூடும் வைபவங்களை வரையறுக் குமாறு ஜனாதிபதி சுகாதாரப் பிரிவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
Related posts:
இராஜாங்க அமைச்சர்களுக்கு உத்தியோகபூர்வமாக அதிகாரங்கள்!
தென்மாகாணத்தில் வைரஸ் தொற்றுடையோர் எண்ணிக்கை அதிகரிப்பு!
புத்தாண்டில் முதலாவது நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பம்!
|
|
|
நாட்டில் ஒவ்வெவாரு விநாடியும் சுற்றுச் சூழலுக்கு கழிவாக மாறும் 50 ஆயிரம் முகக்கவசங்கள் - சுற்றுச்சூழ...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உகண்டா ஜனாதிபதி யொவேரி முசேவேனி இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு - புதிய அ...
சர்வதேச சிறுவர் தினம் இன்று – பிறப்பு சான்றிதழ் இல்லாத சிறுவர்களுக்கு சான்றிதழ் வழங்க நடவடிக்கை - ந...


