வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன – அமெரிக்கத் தூதர் முக்கிய சந்திப்பு!
Sunday, April 11th, 2021
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிடஸ் ஆகியோர் நேரில் சந்தித்துள்ளனர்.
கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் குறித்த சந்திப்பு நேற்று நடைபெற்றது.
இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான இரு தரப்பு உறவுகள் குறித்து இருவரும் கலந்துரையாடினர் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேநேரம், இலங்கை – அமெரிக்க உறவை மேலும் வலுப்படுத்திக்கொள்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது என்றும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இலங்கை மீதான ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் இருவரும் சந்தித்துக்கொண்டது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
இன்று நள்ளிரவு முதல் மருந்துகளின் விலைகள் குறைவடையும்!
உலகக் கிண்ணத்தை வென்று வரலாறு படைத்தது இங்கிலாந்து!
விவசாயிகளுக்கு இலவசமாக உரத்தினை வழங்க நடவடிக்கை - விவசாய அமைச்சு தெரிவிப்பு!
|
|
|
ஸ்கந்தபுரம் கரும்புத்தோட்டக் காணி உத்தியோகபூர்வமாக பிரதேச அமைப்புக்களிடம் கையளிப்பு - சம்பிரதாயபூர்வ...
டிசம்பர் மாத இறுதிக்குள் அதிபர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை - கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெ...
நெருங்கும் ஜனாதிபதி தேர்தல் - 10 மில்லியனுக்கும் அதிகமான உத்தியோகபூர்வ தேர்தல் வாக்காளர் அட்டைகளை வி...


