திருகோணமலை மறை மாவட்ட ஆயரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மரியாதை நிமித்தம் சந்திப்பு!
Saturday, March 27th, 2021
திருகோணமலை மறை மாவட்ட ஆண்டகை நோயல் இமானுவேல் அவர்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மரியாதை நிமித்தம் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
இதன்போது திருகோணமலை மாவட்டத்தில் நன்னீர் மீன் வளர்ப்பு மற்றும் பனைசார் உற்பத்திகளை விருத்தி செய்வதன் மூலம் மக்களுக்கு சிறந்த வாழ்வாதாரத்தினை உருவாக்கவும் வறிய குடும்பங்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தவதற்கு அமைச்சினால் முன்னெடுக்கப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்தும் ஆயர் இதன்போது அமைச்சரிடம் முன்மொழிந்திருந்தார்.
திருமலை மாவட்ட ஆயரின் கருத்துக்களை ஏற்றுக்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் அமைச்சு மற்றும் கிராமிய எழுச்சி திட்டத்தின் உள்ளூர் கைத்தொழில் துறைகளை மேம்மபடுத்துவதற்கான எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற முடியும் எனவும் உறுதியளித்துள்ளார்.
Related posts:
சிறந்த அரசியல் சூழ்நிலை உருவாக்கப்படும் போதுதான் சமூக சீரழிவுகளைக் கட்டுப்படுத்த முடியும் - செயலாளர்...
வல்வெட்டித்துறை, தொண்டமானாறு களப்பு பிரதேச நிலைமைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கள ஆய்வு!
தோழர் ரவீந்திரனின் புகழுடலுக்கு ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி!
|
|
|
வடக்கு வீதியில் அதிக கெடுபிடி : அங்கலாய்க்கின்றனர் மக்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்கா...
காணாமல் போன உறவுகளை சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் விருப்பம் தெரிவித...
சட்டம் நிறைவேற்றப்பட்டது நாடாளுமன்ற உறுப்பினர்களால் - சபாநாயகரால் அல்ல என்பதையும் மனதில் கொள்ள வேண்...


