நடந்தவை நடந்ததாகே இருக்கட்டும். நடக்கப் போவது நல்லதாக அமையட்டும்- முல்லைத்தீவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, February 26th, 2021

நடந்தவை நடந்ததாகவே இருக்கட்டும் நடக்கப் போவது நல்லதாக அமையட்டும் என்று முல்லைத்தீவில் கடற்றொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவுக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள கடற்றொழில் அமைச்சர் இன்று (26.02.2021) பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்ட போதே இதனைத் தெரிவித்தார்.

குறித்த சந்திப்பில் மேலும் கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் – கடந்த காலங்களில் மக்கள் சரியானவர்களை தெரிவு செய்யாமையின் காரணமாகவே மக்களின் பிரச்சினைகள் தீராப் பிரச்சினைகளாக தொடர்ந்து வருவதாக  தெரிவித்ததுடன் கடந்த காலத் தேர்தல்களில் போதிய மக்கள் ஆதரவு கிடைக்காமையினால்மக்கள் எதிர்கொள்ளுகின்ற சில பிரச்சினைகள் தொடர்பாக வலுவாகக் குரல் கொடுக்க முடியாமல் இருப்பதாகவும் தெரிவித்தார்.

எவ்வாறெனினும், மக்கள் எதிர்காலத்தில் சரியான வழிமுறையை தெரிவு செய்வார்களாயின் நடக்கப் போகின்றவை சிறப்பானதாக இருக்கும் எனவும் தெரிவித்தார்

மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த நியமனம் உறுதிப்படுத்தப்படாத தொண்டர் ஆசிரியர்களுடனும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடி பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமைகளையும் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் -; செயலாளர் நாயகம் டக்ளஸ் ...
நடைமுறை சாத்தியமான வழிகாட்டுதலைத்தான் மக்களிடம் நான் தொடர்ச்சியாக கூறிவந்துகொண்டிருக்கின்றேன் – அமைச...
தமிழ் மக்கள் பெற்ற வெற்றியை தமிழ் தலைமைகள் சரியாக பயன்படுத்தத் தவறிவிட்டார்கள் - டக்ளஸ் குற்றச்சாட்ட...

கப்பல் விபத்தினை எர்கொண்டது போன்று உலகலாவிய பொருளாதார சவால்களையும் இலங்கை - இந்தியா நாடுகள் கைகோர்த்...
அரிசி வழங்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் திட்டம் – கரைச்சி பிரதேச பயனாளிகளுக்கு அமைச்சர் டக்ள...
பூநகரியில் நிறுவப்பட்டது கடல் வள ஆய்வு மையம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அதிகாரபூர்வமாக திறந்த...